ரூ.7 லட்சம் இழப்பீடு அறிவித்த கூடங்குளம் போராட்டக்குழு: பணம் எங்கிருந்து வருகிறது?

Subscribe to Oneindia Tamil

Kudankulam Protesters
நெல்லை: கூடங்குளம் அணு உலையை எதிர்த்து நடக்கும் போராட்டத்தில் உயிர் இழப்போரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை வழங்கப்படும் என்று போராட்டக்குழு அறிவிப்பு வெளியிட்டது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து கூடங்குளம் போராட்டக்குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்த தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை கூடங்குளம் மற்றும் இடிந்தகரையில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பினரும் காயமடைந்தனர்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை போராட்டக்குழுவினர் கடலோர கிராமங்களில் தண்டோரா போட்டனர். அதாவது ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போராட்டத்தின்போது ஏதாவது அசம்பாவிதம் நடந்து உயிர் இழப்பு ஏற்பட்டால் அவர்களின் குடும்பத்திற்கு போராட்டக்குழு இழப்பீடு வழங்கும் என்றும், கூத்தங்குழியைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.7 லட்சமும், இடிந்தகரையைச் சேர்ந்தவர் இறந்தால் ரூ.5 லட்சமும் வழங்கப்படும் என்று தண்டோரா போட்டனர். மேலும் இதற்காக 32 பேர் கொண்ட நிதிக்குழுவும் அமைக்கப்பட்டது.

கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது என்ற குற்றச்சாட்டை போராட்டக்குழு மறுத்தது. அரசியல் கட்சிகள் வேண்டும் என்றே தங்கள் மீது பழிபோடுவதாகத் தெரிவித்தது. இந்நிலையில் போராட்டத்தில் இறப்பவரின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சமும், ரூ. 5 லட்சமும் இழப்பீடு வழங்க அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒரு வேளை அரசியல் கட்சிகள் கூறிய புகார் உண்மையாக இருக்குமோ என்று பலர் நினைக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+