உதயகுமார் எங்கே? குழம்பும் போலீஸ்- வலைவீசி தேடும் 3 மாவட்ட போலீசார்

Subscribe to Oneindia Tamil

Udhayakumar
கூடங்குளம்: சரணடைய வேண்டிய உதயகுமாரை இளைஞர்கள் படகில் கடலுக்குள் கொண்டு சென்றதால் இடிந்தகரையில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராக 400 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் நேற்று இரவு 9 மணிக்கு தேசிய தலைவர் முன்னிலையில் கூடங்குளம் காவல் நிலையத்தில் சரண் அடைவதாகக் கூறினார். ஆனால் அந்த தலைவர் யார் என்பதை உடனே தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்நிலையில் இடிந்தகரை உண்ணாவிரத பந்தலில் இருந்த உதயகுமார் மற்றும் புஷ்பராயனை திடீரென வந்த இளைஞர்கள் 50 பேர் குண்டுகட்டாக படகில் ஏற்றி கடலுக்குள் கொண்டு சென்றனர். இதனால் இடிந்தகரையில் பரபரப்பு ஏற்பட்டது. உதயகுமார் சரண் அடைந்தால் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும் என கருதிய போலீசார் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் அவர் கடலோர பகுதியில் உள்ள ஏதாவது ஒரு காவல் நிலையத்தில் சரண் அடையலாம் என தெரிவிக்கப்பட்டது. நேரம் செல்ல செல்ல உதயகுமார் மீதான மர்மம் அதிகரித்ததே தவிர விடை கிடைக்கவில்லை. இடிந்தகரையில் இருந்து சென்ற அவர் படகில் கடலுக்குள் சென்றாரா அல்லது வேறு ஏதாவது கடற்கரை கிராமங்களில் தஞ்சம் புகுந்தாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+