நெல்லை மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம்: 25 வீடுகள் சேதம்- மக்கள் பீதி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வடகரை, அச்சன்புதூர், வாவா நகரம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் பகல் 12.15 மணிக்கும் பிறகும் மாலை 4.15 மணி மற்றும் 4.45 மணிக்கும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் மாலை 4.45 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் 25 வீடுகள் சேதமைடைந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன.
இது குறித்து வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் உடனடியாக வராமல் காலம் தாழ்த்தி வந்ததாக அப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர் .இரவில் அப்பகுதி பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது. மேலும் இடுக்கி முதல் திருச்செந்தூர் வரை நில அதிர்வு ஏற்படும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் கூறப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடையநல்லூர் எம்.எல்.ஏ.வும்., அமைச்சருமான செந்தூர் பாண்டியன் மாவட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கவும், அப்பகுதியில் ஆய்வு நடத்தவும் உத்தரவிட்டுள்ளார் .
வீட்டு மாடியில் பெரிய பாறாங்கல்லை தூக்கிப் போட்டால் எப்படி சத்தம் வருமோ அதே போன்ற சத்தம் நிலநடுக்கம் ஏற்பட்டபோது கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications