இந்தியா வரும் ராஜபக்சேவை செருப்பால் அடியுங்கள்.... தீக்குளித்த சேலம் டிரைவர் விஜயாராஜ்

Subscribe to Oneindia Tamil

Vijayaraj
சேலம்: கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகும் இந்தியாவுக்கு வருகை தரும் இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று சேலத்தில் இன்று காலையில் தீக்குளித்த ஆட்டோ டிரைவர் விஜய்ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பலத்த தீக்காயங்களுடன் மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இலங்கைக்கு ஆயுதங்கள், டாங்கிகள், கனரக விமானங்கள் கொடுத்து தமிழர்களுக்கு இந்திய அரசு தொடர் துரோகம் இழைத்துள்ளது. இந்த மத்திய அரசும், சோனியா காந்தியும் இன்னும் திருந்தவில்லை. இனியாவது இவர்கள் திருந்த வேண்டும்.

என்னுடைய உயிர் தியாகத்தைப் பார்த்து தமிழர்கள் ராஜபக்சேவை செருப்பால் அடிக்க வேண்டும். அதற்காகத்தான் இதை நான் செய்தேன். ராஜபக்சேவை இந்தியாவிற்குள் விடக்கூடாது. பலரது வீரமரணத்திற்கும் பிறகும் ராஜபச்சேவுக்கு இந்திய அரசு வரவேற்பு கொடுக்கிறது. இதை பார்த்தாவது தமிழர்கள் ஒட்டுமொத்தமாக எழுச்சிப் பெற்று ராஜபக்சேவை எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+