கடும் எதிர்ப்புகளையும் மீறி டெல்லியில் ராஜபக்சே: பிரணாப்-மன்மோகனை சந்திக்கிறார்

இந்தியாவில் 4 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை ராஜபக்சே மேற்கொண்டுள்ளார். இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை அடுத்து அமைந்துள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் சிறப்பு விமானத்தில் அவர் வந்தார். அவருக்கு மத்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை அவரது மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு சந்தித்துப் பேசுகிறார். பின்னர், பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசுகிறார். அங்கு ராஜபக்சேவுக்கு மன்மோகன்சிங் இரவு விருந்து அளிக்கிறார்.
நாளை காலையில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்கிறார். அங்கு அமைய இருக்கும் புத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல்லை நாட்டுகிறார்.
அவரது வருகைக்கு மதிமுக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சாஞ்சியில் போராட்டம் நடத்தவும் மதிமுக, சமூக அமைப்புகள் சில திட்டமிட்டுள்ளன. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications