கூடங்குளம் அணு மின் நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணி தொடங்கியதா, இல்லையா....?

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்ப இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. ஆனால் எரிபொருள் நிரப்புவதை எதிர்த்து அணு உலை எதிர்ப்பாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் சத்தம் இன்றி விநாயகர் சதுர்த்தி அன்று இந்தியா மற்றும் ரஷ்ய விஞ்ஞானிகள், பொறியாளர்கள் சேர்ந்து முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் துவங்கிவிட்டனர் என்று அப்பகுதியில் பேசப்படுகிறது.
ஆனால் இதுவரை எரிபொருள் நிரப்பப்படவில்லை என்று கூடங்குளம் அணு மின் நிலைய இயக்குனர் காசிநாத் பாலாஜி தெரிவி்த்துள்ளார். இருப்பினும் எரிபொருள் நிரப்பும் பணி துவங்கியது மக்களுக்கு தெரிய வந்தால் போராட்டம் இன்னும் பெரிய அளவில் வெடிக்கும் என்பதால் சத்தமில்லாமல் பணியைத் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.
கூடங்குளத்தில் எப்பொழுதும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் அணு மின் நிலையத்திற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications