வெறுப்பு, பகையைமை சகித்துக் கொள்ள வேண்டுமாம்: சாஞ்சியில் ராஜபக்சே பேச்சு

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், ராய்சென் மாவட்டம் சாஞ்சியில் சுமார் ரூ.200 கோடி செலவில் அமைய உள்ள இந்த பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
ஏராளமான எதிர்ப்புக்களின் மத்தியிலும் குருக்கள் வேத மந்திரங்கள் ஓத, எம்.பி. கவர்னர் ராம் நரேஷ் யாதவ், மற்றும் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் புடைசூழ புத்த சிலைக்கும் பல்கலைக்கழகத்துக்குமான அடிக்கல்லை நட்டு வைத்தார் மஹிந்த ராஜபக்ஷ.
அதியுச்ச பாதுகாப்பாக உலங்கு வானூர்தியில் சாஞ்சிக்கு வந்திருந்த ராஜபக்ஷவை மத்திய பிரதேச கலாசார மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் லக்ஷ்மிகாந்த் சர்மா வரவேற்றார்.
ஆசிய நாடுகளுக்கிடையே பரஸ்பர உறவை மேம்படுத்தும் நோக்கில் இந்திய ஆய்வுகளுக்காக கட்டப்படும் சாஞ்சி பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டுவது தனக்கு பெருமையாக இருப்பதாக கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் இருந்து கொண்டு வந்த மஹாபோதி அரச மரத்தினை சாஞ்சி பல்கலைக்கழகத்தில் புத்தர் சிலை நடுவதற்காக தன்னுடைய சிறப்புப் பரிசாக கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாஞ்சியில் நடைபெற்ற புத்தமத பல்கலைக் கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குண்டுதுளைக்காத கூண்டு மேடையில் நின்றபடி ராஜபக்சே பேசியதாவது:
உலக நாடுகள் அனைத்தும் வெறுப்பு, பகையை சகித்துக் கொள்ள வேண்டும். இதில் கிழக்கு மற்றும் மேற்கத்திய பகுதிகளுக்கு சம முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு மிகவும் அவசியம். பகை, வெறுப்பு வளர்ந்தால் வன்முறைக்கு வழிவகுத்து அழிவு ஏற்படும். சமுதாயத்திற்கு மிகப்பெரிய இழப்பையும் ஏற்படுத்தும். நவீன இந்தியாவின் தலைசிறந்த மகன் மகாத்மா காந்தி. உலகில் அகிம்சை, சமாதானம் மற்றும் இரக்க குணம் ஆகியவற்றை பரப்ப வேண்டும் என்றார்.
மேலும் இலங்கையில் இருந்து அரச மரக் கிளையை சாஞ்சி பல்கலைக் கழகத்தில் நடுவதற்காக மகிந்த ராஜபக்ச கொண்டு வந்திருந்தார். அதுவும் நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications