சென்னையில் 2 இணை கமிஷனர்களுக்கு மாற்றம்- கோவை டி.ஐ.ஜி நெல்லைக்கு இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் பணியாற்றி வந்த 2 இணை போலீஸ் கமிஷனர்கள் துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் பணியாற்றி வந்த டி.ஐ.ஜி நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது,
* நெல்லை சரக டி.ஐ.ஜி.வரதராஜு, சென்னை உளவுப்பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
* சென்னை போக்குவரத்து இணை கமிஷனர் ரவிக்குமார், சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
* சென்னை கிழக்கு மண்டல இணை கமிஷனர் சேஷசாயி, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை கமிஷனராக பொறுப்பு ஏற்பார்.
* கோவை சரக டி.ஐ.ஜி. சுமித்சரண், நெல்லை சரக புதிய டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications