கோவையில் தொடரும் கோரம்... காதலை உதறிய அத்தை மகளைக் கத்தியால் குத்திய வாலிபர்

Subscribe to Oneindia Tamil

கோவை: அமைதிக்குப் பெயர் போன கோவையில் தற்போது கொடும் வன்முறைகளை தலை தூக்கி வருவதை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. காதலித்து பின்னர் கைவிட் மாணவியை மிகக் கொடூரமாகக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட வாலிபரைத் தொடர்ந்து காதலித்து விட்டு பின்னர் மறுத்து விட்ட அத்தை மகளை வாலிபர் ஒருவர் சரமாரியாக குத்தி சாய்த்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

கோவை, குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் மதன் குமார். எம்.காம் படித்துள்ளார். குமாரின் தந்தை நாகராஜனின் தங்கை மகள் ரம்யா. இவர் எம்.சி.ஏ படித்துள்ளார்.

அத்தை மகளான ரம்யாவை மதன்குமார் காதலித்து வந்துள்ளார். 5 வருடமாக இது நீடித்துள்ளது. இந்த நிலையில் திடீரென 3 மாதமாக தனது மாமன் மகன் மதன்குமாரை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார் ரம்யா. மேலும் ஒருவரை காதலிக்கவும் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு காந்திபுரம் பகுதியில் ஒரு வாலிபருடன் ரம்யா சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தார் மதன்குமார். இதனால் கோபமடைந்த அவர் நேராக ரம்யாவிடம் போனார். அதைப் பார்த்துப் பயந்து போன ரம்யா தான் பேசிக் கொண்டிருந்த நபரின் காருக்குள் வேகமாக ஏறினார். கதவை மூடிக் கொண்டார். ஆனால் காருக்குள் புகுந்து ரம்யாவை வெளியே இழுத்த மதன்குமார், ரம்யாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் ரம்யா படுகாயமடைந்து அலறினார்.

உடனே திரண்ட மக்கள் மதன்குமாரை தடுத்துப் பிடித்தனர். போலீஸார் விரைந்து வந்து ரம்யாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

தொடர்ந்து இப்படிக் காதலின் பெயரால் கோவையில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி, தற்கொலை என்று வன்முறை தலையெடுத்து வருவது மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+