6 நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய சவூதி இளவரசி

Subscribe to Oneindia Tamil

Saudi Princess
டெல்லி: 6 நாள் பயணமாக இந்தியா வந்த சவூதி இளவரசி ஆதிலா தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

சவுதி அரேபிய மன்னர் அப்துல்லா பின்-அப்துல் அஜீஸ் அல் சவுதின் மகளான இளவரசி ஆதிலா பின்ட் அப்துல்லா அல் சவுத் 6 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். அவருடன் 12 அதிகாரிகள் அடங்கிய குழுவும் வந்திருந்தது. அவர் லோக்சபா சபாநாயகர் மீரா குமார், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், சுற்றுலாத்துறை இணையமைச்சர் சுல்தான் அகமத் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளுக்கிடையேயான உறவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளனர்.

மேலும் அவர் கலை மற்றும் கலாச்சாரத் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். கலை மற்றும் கலாச்சாரத்தில் அதிக ஆர்வமுள்ள இளவரசி நேற்று மாலை தனது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். முன்னதாக அவர் ஆக்ராவில் உள்ள காதல் சின்னமான தாஜ்மஹாலுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+