மன்மோகன் சிங்கின் மகள், மருமகன் ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம்
திருச்சி : பிரமதர் மன்மோகன்சிங்கின் மகள் உபிந்தர் சிங் தனது கணவருடன் திருச்சி தாயுமானவர் சுவாமி கோவிலிலும், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார். அவர்களின் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உபிந்தர் சிங், டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியையாக உள்ளார். இவர் தனது கணவர் விஜய்தாங்காவுடன் தமிழகத்தில் ஒரு வார பயணம் மேற்கொண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்கள் மற்றும் இடங்களை பார்வையிடுகிறார். இதற்காக அவர்கள் இன்று காலை மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி வந்தனர்.
சிறிது நேர ஓய்வுக்குப்பின்னர், காலை 9 மணியளவில் உபிந்தர் சிங்கும், கணவர் விஜய்தாங்காவும் மலைக்கோட்டை தாயுமானவர் சாமி மற்றும் உச்சி பிள்ளையார் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்தனர். அதன்பின் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலுக்கும் சென்று சுவாதி தரிசனம் செய்தனர். இரவு திருச்சியில் தங்கும் அவர்கள், ஞாயிறு காலை தஞ்சைக்கு புறப்பட்டு செல்கின்றனர். தஞ்சாவூர், கும்பகோணத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்யும் அவர்கள் அக்டோபர் 2ம் தேதி இரவு சிதம்பரம் சென்று நடராஜர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
பிரதமரின் குடும்பத்தினர் வருகையை ஒட்டி திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications