அருணகிரிநாதரையும் மதுரை ஆதீனத்தில் இருந்து வெளியேற்ற கோரி போலீசில் புதிய மனு
மதுரை: மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் இறைப்பணி ஆற்றாமல் மடத்தின் விதிகளை மீறி செயல்படுவதால் அவரையும் நித்தியானந்தாவையும் மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று மதுரை ஆதீன மட மீட்புக் குழுவினர் புகார் கொடுத்துள்ளனர்.
என்னைக்கு நித்தியானந்தா, மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டாரோ அன்று பிடித்தது "ரகளை".. நாள்தோறும் எதிர்ப்பு..எதிர்ப்பு.. கண்டனம்...கண்டனம். வெளியேறு.வெளியேறு முழக்கங்களாலும் சர்ச்சைகளாலும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது மதுரை ஆதீனம்,
இந்த நிலையில் மதுரை ஆதீன மடத்தின் மீட்புக்குழுவை சேர்ந்த திருமாறன், சோலைக்கண்ணன் உள்பட 5 பேர் இன்று மதுரை காவல்துறை ஆணையர் சஞ்சய் மாத்தூரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளனர்.
அம்மனுவில், மதுரை ஆதீன மடம் பழமை வாய்ந்ததாகும். ரூ. 500 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளது. இந்த வருமானத்தின் மூலம் மதுரை ஆதீனம் இறைப்பணி ஆற்றாமல் மடத்தின் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார். மடத்தின் புகழையும் சீரழித்து வருகிறார். மேலும் அவர் 500 கோடி சொத்துக்களை மோசடி செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அதுபோல நித்யானந்தாவையும் மடத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் நித்தியானந்தா விவகாரத்தில் மதுரை ஆதீனம் விதிமீறி செயல்பட்டதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதுடன்ம்












Click it and Unblock the Notifications