மோதல் வழக்கு: முன்னாள் மதுரை துணை மேயர் மன்னனுக்கு ஜாமீன்
நெல்லை: திருச்செந்தூர் இடைத்தேர்தலின் போது ஏற்பட்ட மோதல் தொடர்பான வழக்கில் திமுகவை சேர்ந்த முன்னாள் மதுரை துணை மேயர் மன்னன், திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன் ஜாமீன் பெற்றார்.
கடந்த 2009ம் ஆண்டு திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் 3.12.2009 அன்று குலசேகரபட்டிணம் பைபாஸ் சாலையில் திமுக, அதிமுக கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக குலசேகரப்பட்டிணம் போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். இந்த நிலையில் தற்போது இவ்வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட திமுகவினரை கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபி ஆகியோர் தூத்துக்குடி அமர்வு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
இதை விசாரித்த நீதிமன்றம், மன்னன், கோபி ஆகியோரை திருச்செந்தூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜாராகி முன்ஜாமீன் பெற்றுக் கொள்ளுமாறு உத்தரவிட்டது. இதையடுத்து இருவரும் நேற்று திருச்செந்தூர் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். நீதிபதி நம்பிராஜன் இருவருக்கும் முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications