மார்ச்சில் லோக்சபா தேர்தல் வரும், காங். கூட்டணி மோசமாக தோற்கும்- சாமி

Subscribe to Oneindia Tamil

Subramanian Swamy
சென்னை: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரும். அதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மோசமான தோல்வியைத் தழுவும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆரூடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனேகமாக பிப்ரவரி, மார்ச் மாதத்தில் லோக்சபாவுக்கு இடைத் தேர்தல் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் அப்படித்தான் எனக்குக் கூறுகின்றன. இடைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு மோசமான தோல்வி கிடைக்கும்.

ஊழல் பிரச்சினைகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் சமாளிக்க முடியவில்லை. மேலும் தீவிரவாதத்தையும் அது கட்டுப்படுத்தத் தவறி விட்டது. இவையெல்லாம் லோக்சபா தேர்தலில் முக்கியப் பிரச்சினைகளாக எதிரொலிக்கும்.

மூன்றாவது அணி அமைவது சாத்தியமில்லை. தற்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பும் இல்லை என்றே கருதுகிறேன்.

தற்போதைய மத்திய அரசு மிகவும் மோசமான அரசு. இதன் மீது மக்கள் எப்போதோ நம்பிக்கையை இழந்து விட்டனர். இது எவ்வளவு சீக்கிரம் போகிறதோ, அவ்வளவுக்கு மக்களுக்கு நல்லது.

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடுகளை அமைத்தால் இந்தியாவில் உள்ள பல கோடி சிறு வர்த்தகர்களின் வாழ்க்கை பறி போய் விடும். அவர்களால் அன்னிய நிறுவனங்களுடன் போட்டி போட முடியாது. அவர்களது வாழ்க்கை பரிதாபகரமாக மாறி விடும்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ. 1880 கோடி செலவிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இதற்கும், நாட்டு மக்களுக்கும் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும். இது அக்கட்சியின் கடமையாகும் என்றார் சாமி.

சாமி இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதாக அவரே பலமுறை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+