திமுகவுக்கு ஏட்டிக்குப் போட்டி.. பச்சை சேலை அணிந்து துண்டுப் பிரசுரம் விநியோகித்த வளர்மதி!
Subscribe to Oneindia Tamil

சமீபத்தில் அதிமுக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து துண்டுப் பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்து போராட்டம் நடத்தினர். இதற்குப் போட்டியாக தற்போது அதிமுகவினரும் களத்தில் குதித்துள்ளனர்.
அதாவது பச்சை உடை அணிந்து அதிமுகவினர், ஜெயலலிதா அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோக்கத் தொடங்கியுள்ளனர். சென்னையில் அமைச்சர் பா. வளர்மதி இதைத் தொடங்கி வைத்தார். அவரும் பச்சை உடையில்தான் வந்திருந்தார். அதாவது பச்சை நிற புடவை கட்டிக் கொண்டு வந்திருந்தார் வளர்மதி.
அவருடன் வந்த அதிமுகவைச் சேர்ந்த ஆண் தொண்டர்கள் பச்சை சட்டையில் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications