For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக முன்னாள் அமைச்சர் பரிதி மீது நில மோசடி வழக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : நில மோசடி வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள தர்ம தோப்பு என்ற அறக்கட்டளைக்கு சொந்தமாக ஏழரை ஏக்கர் நிலம் உள்ளது. அதன் ஒரு பகுதியை பரிதி இளம்வழுதி மற்றும் அவர் உதவியாளர் கக்காரீன், வாசு, சிட்டிபாபு உள்பட 24 பேர் ஆக்கிரமித்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து அறக்கட்டளை அறங்காவலர் கங்கா ரெட்டி போலீசில் புகார் தெரிவித்தார். ஆனால் அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிதிஇளம்வழுதி உள்பட 24 பேர் மீதும் 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English summary
Former DMK minister Parithi Ilamvazhuthi has been booked in a land fraud case by Chennai police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X