பிரதமருடன் ஜி.கே.வாசன் சந்திப்பு: தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தரக் கோரிக்கை

அப்போது, கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீரை காவிரியில் இருந்து பெற்றுத் தருமாறு பிரதமரிடம் வாசன் வாசன் வலியுறுத்தினார்.
காவிரி நதி நீர் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் இந்தச் சந்திப்பு நடந்தது.
காவிரி நீரில் தமிழகத்துக்கு உரிய பங்கு குறித்த உண்மை நிலையை பிரதமரிடம் எடுத்துக் கூறியதுடன் தமிழக விவசாயிகளுக்கு காவிரியில் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வாசன் கேட்டுக் கொண்டார்.
முன்னதாக சென்னையில் எண்ணூர் துறைமுக விழாவில் கலந்து கொண்ட வாசன் நிருபர்களிடம் பேசுகையில்,
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஆணையையும், பிரதமரின் உத்தரவையும் மீறி செயல்படும் கர்நாடக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கதாகும். இந்த செயல் நியாயமானதல்ல. சட்டப்படியும், நியாயப்படியும் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பகிர்ந்தளித்திருக்க வேண்டும்.
பிரதமரை பொறுத்தவரை காவிரி ஆணைய கூட்டத்தில் உண்மை நிலமையை அறிந்து இரு மாநில விவசாயிகளின் அவலநிலையை, உண்மை நிலமையை புரிந்ததால் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆனால் கர்நாடக அரசு பிரதமரின் உத்தரவை மதிக்காமல் தண்ணீர் விட தொடர்ந்து மறுக்கிறது. மீண்டும் நான் பிரதமரை சந்தித்து தமிழகத்தின் உண்மை நிலையையும், அவல நிலையையும் எடுத்துக் கூற உள்ளேன்.
மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா காவிரி விஷயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளாரே என்று கேட்டதற்கு பதிலளித்த வாசன், பிரதமரின் தலைமையின் கீழ் உள்ள அனைத்து மத்திய அமைச்சர்களும் பிரதமர் காட்டும் வழியில் தான் செயல்பட வேண்டும். அதுதான் நாட்டுக்கு நல்லது. இதுபோன்ற பிரச்சனைகளில் மத்திய அமைச்சர்கள் பேசும் போது இரு மாநிலங்களின் நல்லுறவை மனதில் வைத்துக் கொண்டு, உறவு கெடாதவாறு பேச வேண்டும். விவசாயிகளின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி 356 சட்டப்பிரிவை பயன்படுத்தி கர்நாடக அரசை கலைக்க வேண்டும் என்று கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு, ஜனநாயகத்தில் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் மதிக்காத எந்த மாநில அரசும் மக்கள் நலனை மனதில் கொண்டு செயல்படுபவர் அல்ல என்பதைத் தான் நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications