பிளாக்மெயில் பேர்வழி ... மூன்றாம் தர ஆள் கெஜ்ரிவால்: சல்மான் குர்ஷித்

மாற்றுத் திறனாளிகளுக்கு தொண்டு நிறுவனம் நடத்துவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டார் சல்மான் குர்ஷித் என்பது அர்விந்த் கெஜ்ரிவால் குழுவின் புகார். இதனால் சல்மான் குர்ஷித்தை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என்பதும் கெஜ்ரிவால் குழுவின் கோரிக்கை. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் இல்லத்தின் முன்பாக கெஜ்ரிவால் போராட்டம் நடத்தி கைதாகியும் இருந்தார்
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், அர்விந்த் கெஜ்ரிவால் ஒரு பிளாக்மெயில் பேர்வழி... மூன்றாம்தர அரசியல்வாதி என்று சாடியுள்ளதுடன் தம் மீதான குற்ற்ச்சாட்டுகளையும் நிராகரித்திருக்கிறார். தம் மீது கெஜ்ரிவால் தரப்பு கூறியுள்ள புகார்கள் ஆதாரமற்றவை என்று விரைவில் நிரூபிப்பேன் என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய குர்ஷித்திற்கு எதிராக கெஜ்ரிவால் முழக்கங்களை எழுப்பி கறுப்பு கொடி காட்டவும் முயன்றதால் பரபரப்பு ஏற்ப்ட்டது.












Click it and Unblock the Notifications