கள்ளத்தொடர்பு- பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற பெண் கைது
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கள்ளதொடர்பால் பிறந்த பச்சிளம்குழந்தையை குழியில் வீசி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பையை அடுத்த முடப்பாலம் அருகே தனியார் கல்குவாரியில் குழி ஒன்றில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்து கிடந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் தலை மற்றும் மூக்கு பகுதியில் ரத்தம் வழிந்திருந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் அம்பையைச் சேர்ந்த மாலதி என்பவர்தான் குழந்தையை குழியில் வீசியது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மாலதியின் முதல் கணவர் பால்துரை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் மூலம் மாலதிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு தற்போது 18 வயது ஆகிறது. பின்னர் விஜயராஜ் என்பவரை மாலதி இரண்டாவது திருமணம் செய்தார். அவர் மூலம் பிறந்த மகனுக்கு தற்போது 12 வயதாகிறது. விஜயராஜூம் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து போனார். இந்நிலையில் மாலதி கள்ளத்தொடர்பில் மீண்டும் கர்ப்பமடைந்திருக்கிறார். இதனால் பெற்ற பச்சிளம் குழந்தையை கொலை செய்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications