திருச்செங்கோடு கல்லூரி மாணவி படுகொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்ற கோரி போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருச்செங்கோடு கல்லூரி மாணவி வெ.காயத்திரி படுகொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி வரும் 18ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர் வெ.காயத்திரி. இந்த நிலையில் காயத்திரியை சுமார் 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்முறை செய்து படுகொலை செய்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். கல்லூரி விடுதியில் இதற்கு முன் நடந்த மாணவிகளின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள தலித் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தலித் மாணவ, மாணவியர் கூட்டமைப்பு சார்பில், சென்னை மெமோரியல் ஹால் எதிரில் வரும் 18ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் மற்றும் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவியர், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+