நெல்லை- தாதர் வாராந்திர சிறப்பு ரயில்-நாளை முதல் துவக்கம்

நெல்லையில் இருந்து மும்பைக்கு செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில் நாளை முதல் அடுத்தடுத்து வரும் 3 புதன்கிழமைகளில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
சிறப்பு ரயில் எண்.06746 நாளை, வரும் 24 மற்றும் 31ம் தேதிகளில் நெல்லையில் இருந்து காலை 7.10க்கு புறப்பட்டு செல்லும், வியாழக்கிழமை அன்று பிற்பகல் 4.25 மணிக்கு தாதரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில் எண்.06745 வெள்ளிக்கிழமைகளில் வரும் 26 மற்றும் நவம்பர் 2ம் தேதி இரவு 8.40 மணி்க்கு தாதரில் இருந்து புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இந்த ரயிலில் ஒரு ஏசி பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி, 6 பொது பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் நெல்லையில் இருந்து கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூர், உடுப்பி, ரத்னகிரி, பனுவேல், தானே வழியாக தாதரை சென்றடையும்.
தென்னக ரயில்வே காலதாமதாமான அறிவிப்பு காரணமாக இந்த சிறப்பு ரயில் முன்பதிவு விபரங்கள் நேற்று மாலை வரை முன்பதிவு பட்டியலில் இடம் பெறவில்லை. இன்று முழுவதும் இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications