கேரள சிறையில் கோவை வாலிபர் மர்மச் சாவு- சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் குறைகள்
திருவனந்தபுரம்: பாலக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட கோவை வாலிபர் கேளராவில் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை கொச்சி சிபிஐ நீதிமன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
பாலக்காட்டை சேர்ந்த ஷூலா என்ற பெண்ணை, கடந்த 29.3.2010 அன்று ஒரு கும்பல் பட்டபகலில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது. அதன்பிறகு அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது.
இது தொடர்பாக கோவையை சேர்ந்த சம்பத் உள்பட 4 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர். இந் நிலையில் சம்பத் பாலக்காடு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அப்போதைய திருச்சூர் சரக ஐஜி முகமது யாசின், பாலக்காடு எஸ்.பி.யாக இருந்த விஜய் சாக்கரே உள்பட 11 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது முகமது யாசின் ஏடிஜிபியாகவும், விஜய் சாகரே டிஐஜியாகவும் உள்ளனர்.
இந் நிலையில் சம்பத்தின் உறவினர்கள், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம், அதில் சில குறைகளை சுட்டிக்காட்டி திரும்ப அனுப்பியது. குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு மீண்டும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications