கேரள சிறையில் கோவை வாலிபர் மர்மச் சாவு- சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் குறைகள்
திருவனந்தபுரம்: பாலக்காட்டில் பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட கோவை வாலிபர் கேளராவில் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை கொச்சி சிபிஐ நீதிமன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
பாலக்காட்டை சேர்ந்த ஷூலா என்ற பெண்ணை, கடந்த 29.3.2010 அன்று ஒரு கும்பல் பட்டபகலில் வீடு புகுந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது. அதன்பிறகு அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது.
இது தொடர்பாக கோவையை சேர்ந்த சம்பத் உள்பட 4 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்தனர். இந் நிலையில் சம்பத் பாலக்காடு காவல் நிலையத்தில் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக குற்றபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் அப்போதைய திருச்சூர் சரக ஐஜி முகமது யாசின், பாலக்காடு எஸ்.பி.யாக இருந்த விஜய் சாக்கரே உள்பட 11 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது முகமது யாசின் ஏடிஜிபியாகவும், விஜய் சாகரே டிஐஜியாகவும் உள்ளனர்.
இந் நிலையில் சம்பத்தின் உறவினர்கள், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிக்கையை பரிசீலனை செய்த நீதிமன்றம், அதில் சில குறைகளை சுட்டிக்காட்டி திரும்ப அனுப்பியது. குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு மீண்டும் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
கோவை, மதுரைக்கு மெட்ரோ! சென்னை கிளாம்பாக்கம் வரை நீட்டிப்பு! அதிமுக தேர்தல் அறிக்கையின் ஹைலைட்ஸ் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம்












Click it and Unblock the Notifications