குழந்தைகள் கண் முன்னே தூக்கில் தொங்கிய தம்பதி: தாய் பலி- தந்தை 'சீரியஸ்'

Subscribe to Oneindia Tamil

அரக்கோணம்: அரக்கோணத்தில் குடும்ப தகராறு காரணமான குழந்தைகளின் கண் முன்னே கணவனும், மனைவியும் தற்கொலை செய்து கொள்ள தூக்கில் தொங்கினர். இதில் மனைவி இறந்தார். கணவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அரக்கோணம் நாகாலம்மன் நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்(32). கார் ஓட்டுநர். இவரது மனைவி ஷர்மியா(28). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, பாலாஜி அரவிந்த்(4) என்ற மகனும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 14ம் தேதி கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் அதிருப்தியடைந்த ஷர்மிளா, வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டார். அதை கண்ட கணவன் ராஜேஷ்குமார், தானும் தற்கொலை செய்து கொள்ள விரும்பி, தூக்கில் தொங்கினார்.

பெற்றோர் தூக்கில் தொங்குவதை கண்ட குழந்தைகள் செய்வது அறியாமல் அழுதனர். குழந்தைகளின் சத்தம் கேட்டு, அப்பகுதியினர் வந்து பார்த்த போது கணவனும், மனைவியும் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக தூக்கில் தொங்கிய இருவரையும் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஷர்மிளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த ராஜேஷ்குமார், மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னம்பலம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+