For Daily Alerts
Just In
சென்னைக்கு எக்ஸ்ட்ரா ‘ஷாக்’- மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிப்பு
தமிழகத்தில் சென்னையில் மட்டும் 1 மணிநேரம் மின்வெட்டு அமலில் இருந்து வருகிறது. இதர மாவட்டங்களில் 10 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் பன்னாட்டு நிறுவனங்களுக்காகத்தான் இம்மின்வெட்டு சலுகை வழங்கபப்டுவதாக இதரபகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
சென்னைக்கு ஒருசலுகை? மற்ற மாவட்டங்களுக்கு ஒரு நடவடிக்கையா? என்ற குமுறல்கள் எதிரொலித்து வந்தன. இதனால்தான் என்னவோ சென்னையில் இனி 2 மணிநேர மின்வெட்டு அமலுக்கு வரும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்திருக்கிறது.
Comments
English summary
TNEB today announced chennai power cut increase from 1 hour to 2 hour.