காதல் ஜோடியை சந்தேகத்தில் பிடித்த சப் இன்ஸ்பெக்டருக்கு தர்ம அடி- உதடு கிழிய மேலதிகாரியிடம் புகார்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் எசகுபிசகாக பேசிக் கொண்டிருந்த காதல் ஜோடியை போலீஸ் நிலையத்தில் தடுத்த வைத்தற்காக பெண் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ஒரு கும்பல் தர்ம அடி அடித்திருகிறது. அடித்த அந்த கும்பல் காதல் ஜோடியுடன் எஸ்கேப்பாகிவிட்டனர்.
சென்னை அண்ணா நினைவிடத்தின் பின்புறம் காதல் ஜோடி 'அப்படி இப்படி'என லீலைகளோடு பேசிக் கொண்டிருந்தனர். இதனை அண்ணா நினைவிடத்து காவலாளி கண்டித்திருக்கிறார். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதனால் கடுப்படைந்த அவர் அண்ணா சதுக்க காவல்நிலையத்தில் அவர்கள் இருவரையும் ஒப்படைத்தனர். இருவரிடமும் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனா விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவிடம் தகராறு செய்தது. அந்தக் குழுவில் ஒருவன் ஜெரீனாவை தர்ம அடி அடித்தான். நிமிர்ந்து பார்த்த ஜெரீனாவுக்கு உதடு கிழிந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது.. வந்த கும்பல் காதல் ஜோடியையும் தூக்கிக் கொண்டு போனது.
இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் சப் இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் திருவல்லிக்கேணி உதவி ஆணையரிடமும் புகார் செய்தனர்.
காவல் நிலையத்தில் புகுந்த போலீசை அடித்த கும்பல் யாராக இருக்குமென்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறது போலீஸ்!












Click it and Unblock the Notifications