கூடங்குளத்தில் மின் உற்பத்தியை துவங்க வரும் 31ம் தேதி உண்ணாவிரதம்-சரத்குமார் அறிவிப்பு
சென்னை:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் துவக்க கோரி, வரும் 31ம் தேதி நெல்லையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைவில் தொடங்க வலியுறுத்தி, சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நெல்லையில் உண்ணாவிரத போராட்டம் வரும் 31ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து, ஏன் வேண்டும் கூடங்குளம்' என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முதல்கட்டமாக பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.
கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பு குறித்து விளக்க புத்தகம் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. அடுத்தப்படியாக எனது தலைமையில் கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி துவங்க கோரி, கோவையில் இருந்து கூடங்குளம் வரை விழிப்புணர்வு வாகன பிரசாரம்' மேற்கொள்ளப்படும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்பு, நன்மைகள் ஆகியவை குறித்து உதயகுமார் உடன் நேருக்கு நேராக விவாதிக்க நான் தயார். நெல்லையில் 31ம் தேதி நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் பங்கேற்க வேண்டுகிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications