22 மணி நேர மின்வெட்டு - தீப்பந்தம் ஏந்திப் போராட்டம்: சீமான்

Subscribe to Oneindia Tamil

Seeman
புதுக்கோட்டை: தமிழகத்தில் நிலவும் 22 மணி நேரம் மின்வெட்டைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்திப் போராட்டம் நடத்துவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது:

காங்கிரஸ், பா.ஜ.க இரு கட்சிகளும் தேசிய கட்சிகள். ஆனால் மாநில கட்சிகள் போல செயல்பட்டு நமக்கு தண்ணீர் கொடுக்க மறுத்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் உள்ள தி.மு.க, அ.தி.மு.க போன்ற மாநில கட்சிகள் தேசிய கட்சிகள் போல செயல்படுகிறது.

மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று அவசர கடிதம் எழுதுகிறார். ஆனால் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு போன ப.சிதம்பரம், அழகிரி போன்றவர்கள் தண்ணீர் கொடு என்று கடிதம் கொடுக்கவில்லை. கிருஷ்ணாவிற்கு உள்ள இன உணர்வு தமிழர்களுக்கு இல்லை.

தமிழகத்தில் இலவசம் என்ற சொல்லை தமிழன் அகராதியில் இருந்து அகற்றுவோம். தமிழகத்தில் 22 மணி நேரம் மின்சாரமே இல்லை. எப்ப பார்த்தாலும் மின்சாரம் இல்லை. இந்த நிலையை மாற்ற தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்துவோம்.

கேரளாவில் அணு உலை இல்லை. ஆனால் அங்கு தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் தமிழகத்தில் மட்டும் ஏன் கிடைக்கவில்லை. காரணம் நமது மின் உற்பத்தியில் 75 சதவீதம் யூனிட் ரூ 3 க்கு பன்னாட்டு முதலாளிகளுக்கு தடையில்லா மின்சாரம் கொடுக்கிறது.

ஆனால் சொந்த மக்கள் ரூ 5 க்கு ஒரு யூனிட் மின்சாரம். அதுவும் 22 மணி நேரம் நமக்கு மின்சாரம் இல்லை.

பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்த்து கொடுத்துவிட்டு நம்மை இருட்டில் போட்டுவிட்டது. மின் தடையால் பினவறைகளில் பிணங்கள் நாறுகின்றன. மின் மயானத்தில் பாதி எரிந்த நிலையில் பிணங்கள் உள்ளன," என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+