நித்யானந்தா மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்ய நெல்லை கண்ணன் கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: மதுரை ஆதீனத்தில் ஏற்பட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் நித்தியானந்தா காரணமாக இருந்ததால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நெல்லை கண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து மதுரை ஆதீன மீட்பு போராட்ட குழு தலைவர் நெல்லை கண்ணன் கூறியதாவது,

நித்யானந்தா, மதுரை மடத்திற்குள் வரும் போதே பல விபரீத நிகழ்வுகள் நடக்கும் என்பதை முன்கூட்டியே மக்களிடம் எடுத்துச் சொன்னோம். மதுரை ஆதீனத்தின் உயிருக்கு நித்யானந்தாவால் ஆபத்து உள்ளது என்பதையும் ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் கூறி வந்தோம்.

தற்போது நீதிமன்றத்தின் வழக்குகளின் முடிவுகளும் நித்யானந்தாவுக்கு எதிராகவே உள்ளது. இந்த சூழ்நிலையில் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியான்தாவை நீக்கும் முடிவை மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் அறிவித்துள்ளார். இதனை ஆதின மீட்பு குழு முழு மனதோடு வரவேற்கிறது.

இந்த நீக்கம் தமிழக அரசின் நடவடிக்கையால் தான் நடந்துள்ளது. இதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆயிரம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். நித்யானந்தாவிடம் பல இளைஞர்கள் சிக்கி தவிக்கின்றனர். அவர்களில் பலரும் நித்யானந்தாவின் போதை பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் குடும்பங்களை மறந்து நித்யானந்தாவிடம் அடிமையாக உள்ளனர். அவர்களையும் தமிழக அரசு மீட்க வேண்டும்.

மேலும் மதுரை ஆதீனத்தின் பல்வேறு சர்ச்சைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் நித்தியானந்தா காராணமாக இருந்ததால், அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+