ராகுல்காந்தி அமைச்சரவையில் சேருவதற்கு வாய்ப்பில்லை: சரத்பவார்
புனே: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி அமைச்சரவையில் சேரவாய்ப்பில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத்பவார் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்போவதாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் யாரஅமைச்சராக நியமிப்பது என்பது குறித்து தெரிவிக்குமாறும் பிரதமர் என்னிடம் கூறினார். எனது கட்சி சார்பில் தாரிக் அன்வருக்கு அமைச்சர் பதவி வழங்கும்படி பிரதமரிடம் தெரிவித்தேன். மத்திய அமைச்சரவையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சேர வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் என்றார்.
முன்னதாக தேசியவாத கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய சரத்பவார், அடுத்த தேர்தலுக்காக நாம் 2014ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதில்லை. அதற்கு முன்னதாகவே தேர்தல் வரலாம். அதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அதே சமயம் கட்சியை வழிநடத்தும் பணியில் ஈடுபடுவேன் என்றார் சரத் பவார்.












Click it and Unblock the Notifications