வெள்ளப் பெருக்கால் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
Subscribe to Oneindia Tamil

கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள குண்டாறு, அடவி நயினார், கருப்பாநதி, கடனாநதி, இராமநதி உள்ளிட்ட அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தென்காசி வட்டார பகுதிகளில் அதிகபட்சமாக குண்டாறு நீர்த்தேக்க பகுதிகளில் 42 மிமீ மழை பதிவாகியுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் பாதுகாப்பை வளைவை தாண்டி கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் குளிக்க ஆர்வமுடன் வந்த சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் அருவியை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications