குஜராத் முதல்வர் மோடியுடன் இங்கிலாந்து தூதர் நேரில் சந்திப்பு

முக்கியத்துவம் என்ன?
குஜராத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இங்கிலாந்து வாழ் குஜராத்திகளும் அடக்கம். இதையடுத்து குஜராத் மாநில அரசுடனான அனைத்து நேரடி உறவுகளையும் இங்கிலாந்து நிறுத்திவிட்டது. 2005-ம் ஆண்டு இங்கிலாந்து செல்ல விசா கோரி மோடி விண்ணப்பித்திருந்தார். ஆனால் இங்கிலாந்து நிராகரித்துவிட்டது. அதேபோல் மோடி இங்கிலாந்து வந்தால் அவரை கைது செய்யவும் கோரி சில அமைப்புகள் நீதிமன்றமும் சென்றன. இந்த நிலையில் அண்மையில் குஜராத் மாநிலத்தின் நிலைமைகளில் முன்னேற்றம் ஏற்படுவதால் அந்த மாநிலத்துடனான உறவுகள் புதுப்பிக்கப்படும் என்று இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்.
காந்திநகரில் சந்திப்பு
இதைத் தொடர்ந்து இன்று இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் ஜேம்ஸ் பெவன் குஜராத்தின் காந்தி நகரில் முதல்வர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 50 நிமிட நேரம் நீடித்தது. அதன் பின்னர் குஜராத் மாநில ஆளுநர் கம்லா பெனிவாலையும் அவர் சந்தித்தார்.












Click it and Unblock the Notifications