வேளாங்கண்ணியிலிருந்து வந்த பஸ் கானாத்தூர் ஹோட்டலுக்குள் புகுந்தது!
சென்னை: வேளாங்கண்ணியிலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து கானாத்தூர் அருகே வந்தபோது நிலை தடுமாறி சாலையோரம் இருந்த சிறிய ஹோட்டலுக்குள் பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏதும் இல்லை.
வேளாங்கண்ணியில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவுப் பேருந்து வந்து கொண்டிருந்தது. பெரியசாமி பேருந்தை ஓட்டி வந்தார். பேருந்தில் 20 பேர் இருந்தனர்.
இன்று அதிகாலையில், நீலாங்கரையை அடுத்துள்ள கானாத்தூர் என்ற இடத்தில் பேருந்து வந்தபோது திடீரென நிலை தடுமாறி பேருந்து வேகமாக ஓடியது. பிறகு சாலையோரம் இருந்த ஹோட்டலுக்குள் பாய்ந்து மோதி நின்றது.
அதிகாலை நேரம் என்பதால் ஹோட்டல் திறக்கப்படவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பேருந்துக்குள் இருந்தவர்களுக்கும் பெரிய அளவில் காயம் ஏதும் இல்லை. 10 பேருக்கு மட்டுமே காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications