தொடரும் கனமழை- தமிழகம், புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருகிறது. மேலும் வடகிழக்கு பருவமழையும் தொடங்கி இருப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது!
சென்னை நகரில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டிருக்கிறது
மேலும் செவ்வாய் கிழமை ஆயுதபூஜை, புதன்கிழமை விஜயதசமி என்பதால் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications