காங்கோவில் இந்திய அமைதிப் படையின் பாலியல் அத்துமீறல் விசாரணை- விரைவில் தீர்ப்பு

மீரட்டில் விசாரணை
காங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை சென்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளனர். 2007-08 ஆம் ஆண்டில் காங்கோவில் பணியாற்றிய இந்திய ராணுவத்தின் 6வது சீக்கியப் பட்டாலியன் பிரிவினர் பெண்களிடம் தவறாக நடந்ததாகப் புகார் எழுந்தது. மொத்தம் 12 அதிகாரிகள் உட்பட 39 ஜவான்கள் இந்தப் பிரிவில் இருந்தனர். 9வது தரைப்படையின் தலைமையகமான மீரட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிரிகேடியர் எம்.எம்.மசூர் தலைமை வகித்தார். ராணுவ அதிகாரிகள் சுனில், பி.வி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஐ.நாவின் டி.என்.ஏ.சோதனை
இந்திய ராணுவத்தினரின் மீது பாலியல் புகார் கூறிய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் டி.என்.ஏ. மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டதில் பல குழந்தைகளிடம் தந்தையின் இந்திய குணாம்சங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு அறிக்கை அனுப்பிய பிறகு இந்த விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு இந்த ராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி இருந்தது.
தொடர் புகார்கள்
2010-ம் ஆண்டு மேஜர் ஒருவர் பாலியல் தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார் என்ற புகாரும் முன்வைக்கப்பட்டது. முன்னதாக 2007-ம் ஆண்ட் ருவாண்டாவில் தங்கத்துக்காக உணவு மற்றும் தகவல்களை இந்திய ராணுவத்தினர் விற்ற என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்திய ராணுவ அதிகாரி மீது பாலியல் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இந்திய ராணுவம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications