காங்கோவில் இந்திய அமைதிப் படையின் பாலியல் அத்துமீறல் விசாரணை- விரைவில் தீர்ப்பு

மீரட்டில் விசாரணை
காங்கோவில் நீடித்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படை சென்றுள்ளது. இதில் ஆயிரக்கணக்கான இந்திய ராணுவத்தினரும் இடம்பெற்றுள்ளனர். 2007-08 ஆம் ஆண்டில் காங்கோவில் பணியாற்றிய இந்திய ராணுவத்தின் 6வது சீக்கியப் பட்டாலியன் பிரிவினர் பெண்களிடம் தவறாக நடந்ததாகப் புகார் எழுந்தது. மொத்தம் 12 அதிகாரிகள் உட்பட 39 ஜவான்கள் இந்தப் பிரிவில் இருந்தனர். 9வது தரைப்படையின் தலைமையகமான மீரட்டில் இந்த விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பிரிகேடியர் எம்.எம்.மசூர் தலைமை வகித்தார். ராணுவ அதிகாரிகள் சுனில், பி.வி. ராமகிருஷ்ணன் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
ஐ.நாவின் டி.என்.ஏ.சோதனை
இந்திய ராணுவத்தினரின் மீது பாலியல் புகார் கூறிய பெண்களுக்குப் பிறந்த குழந்தைகளின் டி.என்.ஏ. மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டதில் பல குழந்தைகளிடம் தந்தையின் இந்திய குணாம்சங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அமைப்பு அறிக்கை அனுப்பிய பிறகு இந்த விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல் கடந்த 2010-ம் ஆண்டு இந்த ராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி இருந்தது.
தொடர் புகார்கள்
2010-ம் ஆண்டு மேஜர் ஒருவர் பாலியல் தொழிலாளர்களுடன் தங்கியிருந்தார் என்ற புகாரும் முன்வைக்கப்பட்டது. முன்னதாக 2007-ம் ஆண்ட் ருவாண்டாவில் தங்கத்துக்காக உணவு மற்றும் தகவல்களை இந்திய ராணுவத்தினர் விற்ற என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர் 2008-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இந்திய ராணுவ அதிகாரி மீது பாலியல் புகார் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக இந்திய ராணுவம் விசாரணை நடத்தியது. இந்த விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படக் கூடும் என்று கூறப்படுகிறது
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா? -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications