டெங்கு காய்ச்சலுக்கு நெல்லை பொறியியல் மாணவி பலி
கடையநல்லூர்: தமிழகத்தை உலுக்கி வரும் டெங்கு காய்ச்சலுக்கு திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவி உயிரிழந்துள்ளார்.
தமிழ்நாட்டில் திருநெல்வேலியில்தான் முதன் முதலில் டெங்கு காய்ச்சல் உருவானது. அதன் பின்னர் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி சுமார் 40 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 200க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரது மகள் நித்யா டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு 3 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு டெங்கு இல்லை என்றும் வைரஸ் காய்ச்சல்தான் என்றும் மருத்துவர்கள் நித்யாவை திருப்பி அனுப்பிவிட்டனர்.
ஆனால் நித்யாவின் உடல்நிலை முழுவதும் குணமடையவில்லை. இதனால் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது நித்யாவுக்கு டெங்கு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் நெல்லை அரசு மருத்துவமனையில் நித்யா அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கு பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications