பாடகி சின்மயி ஆபாசப் புகார் விவகாரத்தில் இருவர் கைது!
Subscribe to Oneindia Tamil

ட்விட்டர் மட்டும் பேஸ்புக் தளங்களில் சின்மயி சர்ச்சைக்குரிய விஷயங்களுக்கு கருத்து தெரிவித்து வருகிறார். சாதி, இடஒதுக்கீடு போன்றவற்றில் அவரது நிலை பலர் எதிர்கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் இந்த கருத்து மோதல் ஆபாசத்துக்கு சென்றுவிட்டது. சின்மயி மற்றும் அவரது தாயார் குறித்து சிலர் மோசமாக சித்தரித்து எழுத ஆரம்பித்துவிட்டனர். சின்மயி படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து அவர் போலீசில் 6 பேர் மீது புகார் தெரிவித்தார். இதன் பேரில் சரவணக்குமார் மற்றும் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ராஜன் என்பவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
மற்ற நால்வரையும் தேடி வருகின்றனர். இதுபோன்ற புகார்களை விசாரிக்க இனி 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படும் என்று சென்னை கமிஷனர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications