திருமணத்திற்கு மறுத்த காதலன் வீட்டில் தூக்கில் தொங்கிய நர்சு!
சென்னை: சென்னையில் திருமணம் செய்து கொள்ள மறுத்த காதலனின் வீட்டில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் நர்சாக பணியாற்றி வந்த காதலி.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் மொதீனா(23). இவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். சென்னை ராஜமங்கலம் சீனிவாசன் தெருவை சேர்ந்த ரகுவரன்(24). எம்.பில் பட்டத்தாரி. இந்த நிலையில் சீனிவாசனை, மொதீனா காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரகுவரனை சந்தித்த மொதீனா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டதாக தெரிகிறது. ஆனால் ரகுவரன் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த மொதீனா, ரகுவரனின் வீட்டிலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த ராஜமங்கலம் போலீசார், மொதீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மொதீனாவை தற்கொலைக்கு தூண்டியதாக ரகுவரனை, போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications