மழை குறையப் போகிறதாம் .. வயிற்றில் புளியைக் கரைக்கும் வானிலை மையம்!
Subscribe to Oneindia Tamil

அரபிக் கடலில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவானது. பின்னர் இது தாழ்வுப் பகுதியாக மாறியது. தற்போது அது வலுவிழந்த நிலையில் வட மேற்கு நோக்கி நகர்ந்து விட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பெய்து வரும் மழையின் தீவிரம், வேகம் குறைந்து படிப்படியாக நிற்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டமாக மட்டுமே இருந்தது. பெரிய அளவில் மழை இல்லை. அவ்வப்போது வெயிலும் விசிட் அடித்துச் சென்றது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மண்டபத்தில் 13 செ.மீ மழை பெய்தது. திண்டிவனத்தில் 8 செ.மீ், பாம்பனில் 5 செ.மீ மழை பதிவானது.












Click it and Unblock the Notifications