மு.க. அழகிரியை திடீரென மதுரையில் சந்தித்தார் மு.க. ஸ்டாலின்!
மதுரை: திமுகவையே இரண்டாகப் பிளவுபடுத்தி நிற்கிறது அக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் புதல்வர்களான மு.க. அழகிரிக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் இடையேயான மோதல்! மு.க. அழகிரி மற்றும் ஸ்டாலின் இருவரும் தனி ஆவர்த்தனம் நடத்தி வருகின்றனர்! ஸ்டாலின் மதுரைக்கு போனாலே அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டுமொத்தமாகவே ஓடி ஒளிவதும் பின்னர் கருணாநிதி கூப்பிட்டு பஞ்சாயத்து நடத்துவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் திடீரென மதுரையில் உள்ள அழகிரி வீட்டுக்கு நேற்றுப் போன மு.க.ஸ்டாலின் ஒரு மணிநேரம் அவருடன் ஆலோசனை நடத்தினார். அவருடன், அவரது மகன் உதயநிதித்மற்றும் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு ஆகியோரும் இருந்தனர்,
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைக் கடுமையாக விமர்சித்தாரே தவிர ஏன் அழகிரியை சந்திக்க வந்தார் என்பது பற்றி வாயே திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படி என்ன அண்ணன் - தம்பி இருவரும் பேசியிருப்பார்கள்?












Click it and Unblock the Notifications