டிஎன்பிஎஸ்சியில் நவீனத்தைப் புகுத்திய உதயச்சந்திரன் திடீர் மாற்றம்!
சென்னை: டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளராக திறம்பட செயல்பட்டு வந்த உதயச்சந்திரனை திடீரென குன்னூருக்குத் தூக்கியடித்துள்ளனர். அவரை
தமிழ்நாடு சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சம்மேளன நிறுவனத்தின் (இன்ட்கோசர்வ்) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக அரசு நியமித்துள்ளது.
இந்த மாற்ற உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி பிறப்பித்துள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் ஆணையாளராக உதயசந்திரன் சிறப்பாக பணியாற்றியவர் உதயச்சந்திரன். பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமித்தனர்.
ஜூன் மாதம் முதல் இந்தப் பொறுப்பை வகித்து வந்தார் உதயச்சந்திரன். இந்த காலகட்டத்தில், பல புதுமைகளை தேர்வாணையத்தில் புகுத்தியவர் உதயச்சந்திரன். அதாவது தேர்வுகளுக்காக இணையதளத்திலேயே விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட்களை நாமாகவே டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்வது என பல நவீன உத்திகளைப் புகுத்தினார் உதயச்சந்திரன். இது தேர்வர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதோடு பல்வேறு தாமதங்களையும் தவிர்க்க உதவியது.
இந்த நிலையில்தான் உதயச்சந்திரன் மாற்றப்பட்டுள்ளார். ஏன் இந்த மாற்றம் என்பது தெரியவில்லை. ஏற்கனவே இன்ட்கோசர்வ் தலைவர் பதவியை உதயசந்திரன் 2001-ல் இருந்து சில காலம் கவனித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications