மத்திய அமைச்சரவை அக்.28-ல் மாற்றப்படுகிறது- எஸ்.எம். கிருஷ்ணா நீக்கப்படுகிறார்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் வீரபத்ரசிங் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ததாலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள் ராஜினாமாவாலும் அமைச்சர்வையில் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் மத்திய அரசு இருந்து வருகிறது.
அமைச்சர்கள் ராஜினாமா செய்தபோது ஒரு அமைச்சரே இரண்டு துறைகளைக் கவனிக்கும் வகையில் பொறுப்புகளைப் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்படைத்து வந்தார.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கடந்த வாரம் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை விரிவாக்கம் கடந்த 19-ம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவையில் சேருவோரின் பட்டியலை இறுதி செய்வதில் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவியதாகக் கூறப்படுகிறது.
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் தேசியவாத காங்கிரûஸச் சேர்ந்த தாரிக் அன்வருக்கு இடம் வழங்கப்படவுள்ளதை அக்கட்சியின் தலைவர் சரத் பவார் உறுதி செய்துள்ளார்.
கர்நாடக மாநில தேர்தலைக் கருத்தில் கொண்டு எஸ்.எம். கிருஷ்ணா மற்றும் பேணி பிரசாத் வர்மா, ஜெய்ஸ்வால், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுபோத் காந்த் சகாய், பி.ஏ. சங்மாவின் மகள் அகதா சங்மா, மகராஷ்டிரத்தைச் சேர்ந்த முகுல் வாஸ்னிக் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவர் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications