முன்னாள் சென்னை அழகி மும்பையில் மர்ம மரணம்

Subscribe to Oneindia Tamil

Bidushi Dash Barde
மும்பை: மிஸ் சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிதுஷி டேஷ் போர்டே மும்பையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார்.

மும்பையில் உள்ள அவரது வீட்டில் பிணம் கண்டெடுக்கப்பட்டது. அவருக்கு வயது 26 ஆகும். கடந்த 2006ம் ஆண்டு மிஸ் சென்னை அழகிப் போட்டியில் பட்டம் வென்றவர் பிதுஷி. இவர் கேரளாவைச் சேர்ந்த தனது கணவருடன் மும்பை அந்தேரி மேற்குப் பகுதியில் வசித்து வந்தார்.

திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு பிதுஷியின் கணவர் கேதார் வீட்டுக்கு வந்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பலமுறை காலிங் பெல்லை அழுத்தியும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அவர் தன்னிடமிருந்த இன்னொரு சாவியை வைத்து கதவைத் திறந்து உள்ளே சென்றார். அங்கு டிராயிங் ரூமில் பிதுஷி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.

இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அவர் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. அவர் விழுந்து கிடந்த இடம் ஒரு கண்ணாடி ஷெல்ப் இருந்த இடமாகும். அவருக்கு சர்க்கரை வியாதி இருந்துள்ளது. எனவே மயக்கமடைந்து கண்ணாடி ஷெல்ப் மீது விழுந்து அதனால் கண்ணாடி உடைந்து குத்தி அவருக்கு ரத்தப்பெருக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது கணவரையும் தீவிர விசாரணைக்குட்படுத்தியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+