For Daily Alerts
Just In
மிகப் பெரும் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளப் போகிறதாம் இலங்கை!
கொழும்பில் இலங்கையின் பேரிடர் கால நடவடிக்கைகளுக்காக குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலங்கையின் தென்மேற்கு கரை புவித் தட்டில் பிளவு ஏற்பட்டிருப்பட்டதாக நிலநடுக்க தடுப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் சகபந்து கூறியுள்ளார். குறிப்பாக இந்தோனேசியா- ஆஸ்திரேலியா புவிதட்டில் இப்பிளவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கையில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருகிறது என்றார் அவர். கடந்த 1615ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய நிலநடுக்கம் மிகப் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியிருந்தது. அதைப் போன்ற ஒரு நிலநடுக்கம் வரக்கூடும் என்கின்றனர் புவியியல் வல்லுநர்கள்!
Comments
English summary
Sri Lanka can no longer be considered isolated from the effects of seismic activities, said chairman of the Sub Committee on Developing Building Guidelines for Earthquake Resistant Designs, of the Disaster Management Centre (DMC) K.L.S.Sahabandu.
Story first published: Thursday, October 25, 2012, 15:37 [IST]