கலா.. நீலா... மாயா... பெண் சிங்கக் குட்டிகளுக்குப் பெயர் சூட்டிய ஜெயலலிதா!
Subscribe to Oneindia Tamil
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சிங்கக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, முறையே, கலா, நீலா, மாயா என்று பெயர் சூட்டியுள்ளார்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள கவிதா என்ற பெண் சிங்கம் சில மாதங்களுக்கு முன்பு கருத்தரித்தது. இந்த சிங்கம், கடந்த மார்ச் மாதம் மூன்று குட்டிகளை ஈன்றது. இதையடுத்து அக்குட்டிகளுக்குப் பெயர் வைக்குமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது அந்தக் குட்டிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா, கலா, நீலா, மாயா என்று முதல்வர் ஜெயலலிதா பெயர் சூட்டினார். இதையடுத்து அம்மா பெயர் வைத்த சிங்கக் குட்டிகள் என்று பலரும் அந்த சிங்கக் குட்டிகளை ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்துச் செல்கின்றனராம்.












Click it and Unblock the Notifications