என்னால் எந்தக் குறையும் வராது... மன்னிப்பு கேட்டார் பழனிமாணிக்கம்
சென்னை: என்னால் திமுகவுக்கோ, தங்களுக்கோ எந்தக் குறையும் வராது என்று கூறி திமுக தலைவர் கருணாநிதிக்கு மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் கடிதம் மூலம் மன்னிப்பு கோரியுள்ளார்.
டி.ஆர்.பாலுவுக்கும், பழனி மாணிக்கத்திற்கும் இடையே திடீரென முட்டல் மோதல் ஏற்பட்டுள்ளது. இது மீடியாக்கள் மூலம் வெளிச்சத்திற்கு வரவே கருணாநிதி அப்செட் ஆனார். பழனிமாணிக்கத்தைக் கூப்பிட்டு விளக்கம் கேட்டார். இந்த நிலையில் கருணாநிதிதான் இந்த நாடகத்திற்குக் காரணம் என்றும் பேச்சு கிளம்பியது. ஆனால் அதை மறுக்கும் வகையில் விரிவான அறிக்கை வெளியிட்டு தனது மன வேதனையை வெளிப்படுத்தினார் கருணாநிதி.
இந்த நிலையில் மன்னிப்பு கேட்டு கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளார் பழனி மாணிக்கம். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தலைவர் கலைஞர் அவர்களுக்கு, வணக்கம். உடன்பிறப்புக் கடிதம் கண்டேன். தங்களின் துயரத்திற்கு நானும் காரணமாகிவிட்டேனே என்று துயரமும், வெட்கமும் அடைந்தேன். தந்தையில்லாத குறையைத் தீர்க்கும் தங்களுக்கு துயரம் தந்துவிட்டேனே.
இனி என் இறுதிநாள்வரை தங்களுக்கும், கழகத்திற்கும் என்னால் எந்தக் குறையும் வராது. நான் செய்த தவறுக்கு தங்கள் தாள் பணிந்து என்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களையும், கழகத்தையும் உயிரெனக் காப்பேன் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications