கேரளாவில் 13 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது-கொடூர வளர்ப்பு தந்தை கைது!
திருவனந்தபுரம்: கேரளாவில் 13 வயது சிறுமிக்கு பல மாதங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பமாக்கிய 39 வயது கொடூர வளர்ப்பு தந்தையை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொந்தரவு மூலம் கர்ப்பிணியான சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள குண்டாரா பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி ஒருவர் நிறைமாத கர்ப்பிணியாக, திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஏ.டி மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் நடைபெற்ற பிரசவத்தில் 8ம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு அழகான குழந்தை பிறந்தது.
ஆனால் குழந்தை பெற்று கொள்ளும் அளவிற்கு உடல் ஆரோக்கியம் இல்லாததால், தாய் மற்றும் சேய் உடல்நிலை மோசமானது. இதையடுத்து சிறுமியின் நிலை குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுமி மற்றும் அவரது தாய், சகோதரன் ஆகியோரிடம் விசாரித்தனர். ஆனால் சிறுமியின் இந்த நிலைக்கு காரணமான நபர் மீது புகார் அளிக்க 3 பேரும் முன் வரவில்லை. இருப்பினும் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
இதில் சிறுமியின் வீட்டில் சிபு(39) என்பவர் கடந்த 8 ஆண்டுகளாக வசித்து வந்துள்ளது தெரியவந்தது. சிறுமியின் தாய்க்கு, சிபு 2வது கணவராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியை கடந்த சில மாதங்களாக சிபு, பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.
துவக்கத்தில் சிறுமியின் தாய்க்கு தெரியாமல் சிபு, சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். அதன்பிறகு குடும்பத்தினரை மிரட்டி, தாயின் கண்ணுக்கு முன்பாகவே, சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
ஆனால் இது குறித்து வெளியே தகவல் தெரிவித்தால் சிறுமியையும், அவரது தாய், சகோதரன் ஆகியோரை கொலை செய்துவிடுவதாக சிபு மிரட்டியதாக தெரிகிறது. இதில் பயந்து போன சிறுமியின் குடும்பத்தினர், இது குறித்து வெளியே தெரிவிக்க பயந்துள்ளனர்.
இதையடுத்து சிபுவை கைது செய்த போலீசார், கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் சிறுமி மற்றும் குழந்தையின் நிலை இன்னும் கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications