பள்ளிகளில் சரியாக படிக்காதோருக்கும் கல்விக் கடன் வழங்க சென்னை ஹைகோர்ட் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளிக்கூடங்களில் சரியாக படிக்காத மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு என்ன?

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த அனிதா என்பவர் மேற்படிப்புக்காக கல்விக்கடன் பெற வங்கி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் பள்ளி அளவில் சரியாக படிக்கவில்லை என்று கூறி விண்ணப்பத்தை வங்கி பரிசீலிக்கவில்லை.இதையடுத்து அனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்

நீதிபதி உத்தரவு

இந்த மனுவினை பரிசீலித்த நீதிபதி, பள்ளி படிப்பில் நன்கு படித்தால் தான் வங்கிக்கடன் வழங்கப்படும் என கூறப்படவில்லை. பள்ளி அளவில் சரிவர படிக்கவில்லை என்பதற்காக கல்விக்கடன் வழங்க வங்கி மறுக்க முடியாது. எனவே பள்ளி அளவில் சரியாக படிக்காத மாணவர்களுக்கும் கல்வி கடன் வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+