தமிழகத்துக்கு மின்சாரம் தர உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
Tamilnadu
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது என்று தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், தமிழக மின் தட்டுப்பாட்டு பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தை நாட தீர்மானிக்கப்பட்டது. தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை வழங்குவது மத்திய அரசின் கடமை என்றும் இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொfடரவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.