ஜெ அணிக்கு போகப் போகிறேனா? - மா பா பாண்டியராஜன் மறுப்பு!

விஜயகாந்தின் தேமுதிகவில் முக்கியமான எம்எல்ஏக்களில் ஒருவர் மா பா பாண்டியராஜன். விருதுநகர் எம்எல்ஏ இவர்.
சமீபத்தில் தேமுதிகவிலிருந்து நான்கு எம்ஏக்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஜெ அணி என்று அழைக்கப்படும் இவர்களுக்கு சட்டமன்றத்தில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேமுதிகவிலிருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் விலகக் கூடும் என்றும் அவர்களில் மா பா பாண்டியராஜனும் ஒருவர் என்றும் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ஒன்இந்தியா தமிழும் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியில் தன்னைப் பற்றிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பாண்டியராஜன்.
இதுகுறித்து நமது செய்தியாளருக்கு அவர் அனுப்பியுள்ள மறுப்புக் கடிதத்தில், "மா பா பாண்டியராஜன் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவிருப்பதாக தங்கள் தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
இது தவறான தகவல். தேமுதிகவுக்கு எதிரான சக்திகள் பரப்பும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் வெளியான செய்தி இது. அந்த தவறான தகவலை நீக்குமாறும், சரியான விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications