வரும் 15ம் தேதிக்குள் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி. தண்ணீர் கொடுங்க: காவிரி கண்காணிப்பு குழு
டெல்லி: தமிழகத்திற்கு வரும் 15ம் தேதிக்குள் காவிரியில் இருந்து 4 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகா அரசிற்கு காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டுள்ளது.
காவிரியில் இருந்து தினமும் 2 டி.எம்.சி வீதம் 24 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் விட கர்நாடக அரசிற்கு உத்தரவிட கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில், இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனையை காவிரி கண்காணிப்பு குழு ஆய்வு செய்து உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அதை இரு மாநில அரசுகளும் ஏற்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் காவிரி கண்காணிப்பு குழுவின் கூட்டம் இன்று காலையில் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு குழுவின் தலைவர் மத்திய நீர் வளத்துறை செயலாளர் துருவிஜய்சிங் தலைமை தாங்கினார்.
தமிழகம், புதுவை, கர்நாடகம், கேரளம் ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பில் தலைமை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியில் கர்நாடகம் திறந்துவிட வேண்டிய தண்ணீரின் அளவு குறித்து தமிழகத்தின் சார்பில் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கர்நாடகாவில் தற்போது நிலவி வரும் பிரச்சனை குறித்தும் விவரிக்கப்பட்டது.
இருத்தரப்பினரின் கருத்துகளை கேட்ட பிறகு, கண்காணிப்பு குழு தலைவர் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது,
கர்நாடக அரசு வரும் 1ம் தேதி(நாளை) முதல் 15ம் தேதிக்குள் தமிழகத்துக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஏற்கனவே அக்டோபர் மாதம் தர வேண்டிய 1.5 டி.எம்.சி. தண்ணீர் நிலுவையையும் சேர்த்து மொத்தம் 5.5 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இதை இரு மாநில அரசுகளும் ஏற்றுக் கொண்டு ஒரு வாரத்தில் எழுத்து பூர்வமாக அறிக்கை அளிக்க வேண்டும். காவிரி கண்காணிப்பு குழுவின் அடுத்த கூட்டம் வரும் 15ம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications